Monday, January 14, 2013

வாரம் ஒரு வலைமனை அறிமுகம்.... வலை 1

 

ஒரு ஒரு வாரமும் எனக்கு தெரிந்த வலைமனைகளை உங்களுக்கு அறிமுக படுத்துவதே இந்த தொடரின் நோக்கம். இந்த வரம்..

வலைமனை பெயர் :

cambridge in color

http://www.cambridgeincolour.com/
விளக்கம் :

இந்த வலைமனை photography பத்தி படிக்க நல்ல ஒரு வலைமனை. இதில மூணு முக்கியமான பிரிவுகள் இருக்கு.

Tools - இந்த பிரிவு போட்டோ எடுக்கும் போது தேவையான கணக்கீடுகள் மற்றும் கருவிகள் பத்தி குடுத்துருக்காங்க.

Tutorials - இந்த பிரிவுதான் உங்களுக்கு அதாவது photography பத்தி தெரிஞ்சிக்க நினைகிரவங்களுக்கு உபயோகமான பிரிவு.

Forums - இது ஒரு கலந்துரையாடல் பிரிவு. உங்கள்ளது கருத்துக்களை நீங்கள் பகிரிந்து கொள்ளலாம்.

வண்ணமிகு புகைப்படங்களுடன் புரியும் வகையில் விளக்கங்கள் கொடுக்கபட்டிருப்பது இந்த வலைமனைக்கு பலம். படித்து பயன் பெறுங்கள். பின்னூட்டம் இடுங்கள் உங்களுக்கு பிடிச்சிருந்தால்.

 

படித்தவருக்கும் பாமரர்க்கும் புகைப்படக்கலை - 1

இந்த தொடரை எழுதுவதற்கு என்னுடைய சின்ன வயசில படிச்ச சுஜாதாவின் "படித்தவருக்கும் பாமரர்க்கும் கணிபொறி" தொடர்தான் காரணம். நானும் கடந்த நாலு வருசமா photography பத்தி படிச்சும் கேட்டும் பார்த்தும் பழகியும் வந்துட்டு இருக்கேன். நமக்கு புரியிற மொழியில நம்ம மொழியில எழுதுறதுக்கான ஒரு முயற்சிதான் இந்த தொடர்.


தொடர் உள்ளாற போறதுக்கு முன்னால சில விசையங்கள். இந்த தொடர் யாருக்கு?
  1. கைல camera வசிக்கிட்டு அதனோட விருப்பதுக்கு வளைஞ்சி குடுக்குறவங்ககுகாக
  2. Photography ஒரு பெரிய சிக்கலான விசையம்னு நினைகிறவங்களுகும்
  3. camera அடிப்படை தொழில்நுட்பம் பத்தி தெரிஞ்சிகனும்னு நினைகிறவங்களுகும்
எல்லாம் சரி யாரு இந்த தொடரை படிக்க வேணாம் ?
  1. இந்த தொடர் முழுசும் பேச்சு வழக்குல எழுத போறேன், அதனால பொருட்குற்றம் சொற்குற்றம் சொல்ற நக்கீரர்கள் please escape!!!!
  2. போட்டோ எடுகிரஅதில உள்ள வரலாறு புவிவியல் தெரிஞ்சிக்கணும்னு நினைகிரவங்க.. என்னால இப்போ அப்படி எழுத முடியுமான்னு தெரியல... எழுதும் போது கண்டிப்பா லெட்டர் போடுறேன் வாங்க.
  3. போட்டோ தொழில்ல இருக்கிறவங்க... அண்ணா நீங்க எல்லாம் என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க அவளவுதான் என்னால சொல்ல முடியும்.
நாட்டுல எவளவோ விசையம் இருக்கும் போது ஏன்டா இத பத்தி எழுதுரன்னு நீங்க கேக்குறது என்னக்கு கேக்குது. நாம வாழ்க்கைல நமக்கே தெரியாம சின்ன வயசில் இருந்து நாம கூடவே வர விசையம் இந்த போட்டோ... நாம சின்ன வயசு போட்டோ பாக்கும் பொது வர பரவசம்.. நாம கல்லூரி போட்டோ பாக்கும் போது வர மகிழ்ச்சி... நாம கல்யாண போட்டோ (கல்யணம் கட்டுனவன்களுக்கு) பாக்கிறப்ப வர ......... (அவங்க அவங்க கற்பனைக்கு ஏத்த மாதிரி போட்டுக்குங்க).. இப்ப புரியுதா நாம போட்டோ மேட்டர் எவளோ முக்கியம்னு..
இந்த தொடரை படிக்கிறவங்ககிட்ட எப்படியாவது ஒரு கேமரா இருக்கும்னு நினைகிறேன் ... கேமரா அப்படினதும் பெரிய lens.. DSLR.. அப்படியெல்லாம் யோசிக்காதீங்க... என்னோட பெரும்பாலான போட்டோக்கள் என்னோட mobile phone உபயோகப்படுத்தி எடுத்ததுதான். அதனால போட்டோ எடுக்கிறத பத்தி கவலை படுங்க எந்த கேமரா அப்படிங்கறத பத்தி பின்னால பாத்துக்கலாம்.
ரொம்ப build-up குடுத்தாச்சி.... போதும்.. கீழ உள்ள போட்டோக்கள் நன் எடுத்தது. இந்த தொடர் முடியும் போது இதை விட நல்லாவே நீங்க போட்டோ எடுக்கலாம். .



அனைவருக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

அனைவருக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள். இந்த பொங்கல் திருநாளாம் தமிழர் திருநாளில் என்னுடைய வலைமனையை தொடங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

உங்களது ஊக்கமும் ஆர்வமும் என்னை மேலும் மேலும் எழுத தூண்டும். இந்த வலைமனை யாரையும் சண்டைக்கு இழுப்பதோ இல்லை சண்டை போடுவதனால பிரபலம் ஆகலாம் அப்படின்னோ ஆரம்பிக்கல. என்னக்கு தெரிஞ்சத என்னக்கு பிடிச்ச விசையங்கள உங்க கூட பகிர்ந்துகத்தான் இந்த வலைமனை.



இந்த நல்ல நாளில் என்னுடைய முதல் புகைப்படகலை பற்றின தொடரை தொடங்குவதில் பெருமை அடைகிறேன்.
என்னுடைய வலைமனை tamil35mm.blogspot.com பெரும்பாலும் புகைப்பட கலையை பற்றியும் புகைப்பட மேதைகள், வாழும் வல்லுனர்கள் பற்றியும் இருக்கும். அப்பப்போ ஊறுகாய் மாதிரி சினிமா பத்தியும் எழுத எண்ணம் இருக்கிறது.
உங்கள் ஆதரவுக்கு நன்றியுடன் இதோ எனது முதல் தொடர்....